நாகப்பட்டினம், பிப்.16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகப்பட்டினம் கிளையின் பேரவைக் கூட்டம், சனிக் கிழமை நாகையில் நடைபெற்றது. பேர வைக்கு வழக்கறிஞர் இரா.நடராசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.மோகன் இங்கர்சால் இயக்கப் பாடல்கள் பாடினார். மாவட்டக் குழு உறுப்பினர் நா.சத்தியசீலன் வர வேற்புரையாற்றினார். மாவட்டச் செய லாளர் ப.பாலசுந்தரம், பேரவையின் நோக்கங்களை விளக்கிக் கூறினார். த.மு.எ.க.ச. மாநிலச் செயற்குழு உறுப் பினர், எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் சிறப்புரையாற்றினார். நாகைக் கிளை புதிய தலைவராக இரா.நடராசன், செய லாளராக து.இளவரசன், பொருளாள ராக இரா.பிச்சைப்பிள்ளை, துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, மாதவன், ஹரிராம், யாழினி ஆகியோர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். மவட்டத் தலை வர் ந.காவியன் வாழ்த்துரை வழங்கி னார். இரா.நடராசன் நன்றி கூறினார்.