தரங்கம்பாடி, அக்4- நாகை மாவட்டம் பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் அடல் டிங்க ரிங் ஆய்வகத்தில் காந்தியின் 150வது பிறந்த தினத்தை யொட்டி சூரிய சக்தி மின் விளக்கு செய்வது எப்படி என்ற பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. உலக அஹிம்சை தினத்தை முன்னிட்டு நிதி ஆயோக் மற்றும் யூனிசெப் அடல் ஆய்வ கம் இணைந்து நடத்திய இப்பயிற்சியை உலகம் முழுவ தும் ஒரு மில்லியன் மாணவ மாணவியர் மேற்கொண்டனர். பொறையார் பள்ளியில் 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சூரிய மின் விளக்குகளை உருவாக்கினர். இப்பயி ற்சிப் பட்டறையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவு ன்ராஜ் எம்.எல்.ஏ துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு சோலார் கிட்டுகளை வழங்கினார். முன்னதாக அவர் காந்தி சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசினார். இந்தியாவிலுள்ள சிறந்த 200 அடல் ஆய்வகங்களில் ஒன்றாக உருவாக்கியமைக்காக அடல் ஆய்வக வழிகாட்டிகள் பத்மா வதி, ராஜு, அம்பிகா ஆகியோர்களுக்கு எம்.எல்.ஏ பரிசுகள் வழங்கினார். தவசுமுத்து நாடார் மேல்நிலை ப்பள்ளி, தூய தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.இ. எல்.சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, தியாகி வள்ளியம்மை அரசு உயர்நிலை ப்பள்ளி, சந்திரபாடி அரசு மேல்நிலைப்பள்ளி, சமத்துவபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, சர்மிளா காடஸ் மேல்நிலை ப்பள்ளி இவைகளிலிருந்து பதிவு செய்திருந்த பங்கேற்றனர். தத்தம் பள்ளியின் பிற மாணாக்கர்களுக்கு பயிற்சியை விரிவு செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 2 சோலார் விள க்கு உபகரண பெட்டகங்கள் வழங்கப்பட்டன. பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளையும் அவர்களை ஊக்குவித்து அழைத்து வந்த ஆசிரிய ஆசிரியைகளையும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன் பாராட்டினார்.