tamilnadu

img

பழையாறு துறைமுகத்தில் மணல் மேடான படகுத் தளம் பெரிய விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை

சீர்காழி, டிச.30- நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன் பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே சிறந்த இரண்டாவது துறைமுகமாக இருந்து வரும் இந்த துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட விசைப்படகு கள், பெரிய விசைப்படகுகளின் உரி மையாளர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, சிறிய ரக விசைப்படகுகள் மற்றும் பெரிய எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப் படகுகள் அனைத்து கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.  அதிகாரிகள் மற்றும் மீன்பிடித் துறை அதிகாரிகளின் மூன்று கட்ட அமைதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு சிறிய ரக விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு சென்று மின் பிடிக்க கடந்த டிச. 11 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டன. அதனடிப்ப டையில் பெரிய ரக அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்க அனுமதிக்க வில்லை. துறைமுகத்தில் உள்ள படகு அணையும் தளத்திலும் பெரிய விசைப்படகுகள் நிறுத்த அனுமதிக்க வில்லை. இதனால், 131 பெரிய விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்ட இடம் வெறிச்சோடி காணப்படுகிறது. இவை அனைத்தும் துறைமுகம் அருகே உள்ள பக்கிம்காம் கால்வா யில் நிறுத்தப்பட்டுள்ளன. துறை முகத்தில் படகுகள் நிறுத்தப்படாத தால் கடந்த 5 மாதங்களில் படகு நிறுத்தப்பட்டிருந்த இடம் 200 மீ நீளத்திற்கும், 10 மீ அகலத்திற்கும் மேடாகியுள்ளது. தொடர்ந்து நிறுத்தா மல் இருந்தால் மேலும் மணல் மேடாகி இதரப் படகுகளும் நிறுத்த முடியாத நிலை ஏற்படலாம். இது குறித்து பெரிய விசைப் படகு உரிமையாளர்கள் சார்பில் கோட்டையன் கூறுகையில், ரூ. 80 லட்சம் முதல் 90 லட்சம் வரை  விலை மதிப்பிலான பெரிய விசைப் படகுகள் எந்த பயனுமின்றி துறை முகத்துக்கு அப்பால் நிறுத்தப் பட்டுள்ளன. தொடர்ந்து மீன்பிடித்து வந்த எங்களை அனுமதிக்காததால் இதை நம்பியுள்ள 700 குடும்பங்கள் வருமானமின்றி அவதிப்படுகிறோம். எனவே தமிழக அரசு, மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக பெரிய விசைப்படகுகளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.

;