tamilnadu

ரூ.1 லட்சம் பறிமுதல்

தரங்கம்பாடி, ஏப்.2- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காளகஸ்தி நாதபுரம் என்ற இடத்தில் குத்தாலம் சமூகப் பாதுகாப்பு தாசில்தார் குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியேஇருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்திச் சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.ஒரு லட்சத்து 190 பறிமுதல் செய்து தரங்கம்பாடி தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் விஜய ராணியிடம் ஒப்படைத்தனர்.  

;