கும்பகோணம், ஜூலை 29- நாகையில் இருந்து ஜெயங்கொண் டம் செல்லும் முக்கிய சாலையாக திரு வாரூர் கும்பகோணம் புறவழிச்சாலை லிங்க் ரோடு ஏற்படுத்தப்பட்டு ஏராள மான கனரக வாகனங்கள் மற்றும் சென்னை ஜெயங்கொண்டம் செல்லும் அனைத்து வாகனங்களும் இவ்வழியே செல்கின்றன. இந்நிலையில் கும்பகோணம் அருகே செட்டி மண்டபம் பகுதியில் பிரிவு புறவழிச்சாலையில் எவ்வித பாது காப்பும் இன்றி எந்த நேரமும் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லா மல் இருண்டு கிடக்கிறது. இதனால் அவ்வப்போது செயின் பறிப்பு திரு டர்கள் இரவு எந்த நேரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன. அண்மையில் நடந்த விப த்தை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததில், கும்பகோணம் திருவாரூர் சாலையில் ஒரு பகுதியில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டு மற்ற பகுதிகளில் பேரிகார்டு தடுப்பு மட்டும் வைக்கப்பட்டது. இது இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டி களுக்கும் தெரியாமல் வாகன ஓட்டிகள் மோதுவதும் எதிரில் வருபவர்கள் புற வழிச் சாலைக்கு திரும்பும் போது திடீர் விபத்துகள் ஏற்பட்டும் தொடர்ந்து அதிக உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. இதற்கு அந்த பகுதியில் செட்டி மண்டபத்தில் இருந்து பிரியும் புற வழிச்சாலை பகுதியில் எவ்வித மின் விளக்குகளும் இல்லை. அதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வழிப்பறி திருடர்கள் கூடாரமாக இருந்து குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில் வெளியூரிலிருந்து கும்பகோணத்திற்கு இரவு நேரங்க ளில் வந்து போகும் இருசக்கர வாக னங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் கும்பகோணத்திற்கு செல்லும் காய்கறி மற்றும் மீன் சில்லறை வியாபாரிகளை அந்தப் பகுதி இருட்டில் நின்று கொண்டு சில வழிப்பறி திருடர்கள் மிரட்டுவதும் சில நேரங்களில் பெண்கள் கழுத்தில் இருக்கும் சங்கிலியை அறுத்து செல்வ தும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகவே போர்க்கால அடிப்படை யில் கும்பகோணம் சாக்கோட்டை அரு கில் உள்ள செட்டி மண்டபத்தில் இருந்து பிரியும் புறவழிச்சாலை பகுதியில் மின் விளக்குகள் அமைத்து கேமராக்கள் பொருத்தப்பட்டு எந்த நேரமும் கண்கா ணிக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.