தரங்கம்பாடி நவ.24- நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள மேமாத்தூர் பகுதியையும், இளையாளூர் ஊராட்சி பகுதியையும் இணைக்கக் கூடிய மஞ்சளாற்றங்கரை தார்ச்சாலையின் ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருவதாகவும், சிறிய அளவில் ஏற்பட்ட மண் அரிப்பு தற்போது கனமழை பொழி வதால் பள்ளம் பெரிதாகி வருவதாகவும், ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது அருகேயுள்ள கிராமங்களில் நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் அரங்கக்குடி அப்துல் கலாம் நகரின் எதிர்புற முள்ள ஆற்றையொட்டிய பகுதியிலும் இதேப் போன்றே மண் அரிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண் அரிப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.