தஞ்சாவூர், ஜூலை 30- தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில் தெரு மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிப்படுகின்ற னர். இதுகுறித்து மக்கள் சட்ட உரிமைகள் கழக தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் முனைவர் வேத.குஞ்சரு ளன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், “பேராவூரணி நகரின் சாலை ஓரங்களில் பழக்கடைகளும், காய்கறி கடை களும் அதிகம் இருப்பதால் மாடுகள் அந்த கடைகளை நோக்கி செல்லவும், கடைகளின் உரிமையாளர்கள் கம்பை கொண்டு மாட்டை விரட்ட மாடு ஓடி வந்து சாலையில் செல்லும் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே பேராவூரணி சாலைகளில் சுற்றித் திரியும் தெரு மாடுகளை அப்புறப்படுத்தி சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் சிரமம் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது