குடவாசல், ஜூலை 7- திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகரப் பகுதி முழுவதும் மின் கம்பங்களில் பல்வேறு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக படித்த இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் பகுதி நேர வேலைக்கான விளம்பர பலகையும் உள்ளன. இந்த பலகைகள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. மேலும் இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகம் மின்கம்பத்தில் உள்ள அனைத்து விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.