சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் சீர்காழி தாலுகா லாரி உரிமையாளர் சங்கக் கூட்டம் நடை பெற்றது. கவுரவத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். பொருளாளர் மனோகரன் வரவேற்றார். செயலாளர் சுரேஷ், துணைத் தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் சிறப்புரையாற்றி னார். கூட்டத்தில், சீர்காழி ரயில் நிலையத்தில் அரிசி, சிமெண்ட் மற்றும் உரம் ஆகிய சரக்குகளை இறக்கி வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். சீர்காழி தாலுகாவில் லாரிகளை பார்க்கிங் செய்வதற்கு இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.