tamilnadu

img

மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சீர்காழி, பிப்.17- மத்திய அரசின் மக்கள் விரோத நிதி நிலை அறிக் கையை கண்டித்து கம்யூ னிஸ்ட் கட்சிகளின் சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி யில் ஸ்டேட் பேங்க் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டச் செயலா ளர்  சி.வி.ஆர்.ஜீவானந்தம் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் வட்டச் செயலாளர் எம். செல்லப்பன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி வட்டக் குழு கே.நாகையா, சி. ராஜேந்திரன், கே.கேசவன், பி.விஜய், மாதர் சங்கம் சார்பில் ஆர்.அமுதா, நகர செயலாளர் கே.கிருஷ்ணன் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பிரபா கரன், நிர்வாகக்குழு பி.தேவகி, டி.ஜெயகுமார், வி.ச வட்டத் தலைவர் சி.கலியமூர்த்தி ஆகியோரும் கண்டன உரை யாற்றினர். 50-க்கும் மேற் பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.