குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாகை மாவட்டம் செம்பனார்கோவில் முதல் திருச்சம்பள்ளி வரை கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சம்பள்ளி ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய லீக் மாநில அமைப்பு செயலாளர் ஏ.ஷாஜகான் தலைமை வகித்தார். பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்கள், ஜமாத் நிர்வாகிகள் உரையாற்றினர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.