tamilnadu

img

திறந்த வெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேதம்.... விவசாயிகள் வேதனை...

வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை நுகர்பொருள் பொருள் வாணிப கழகத்தினர் அறவை ஆலைக்கு எடுத்துச் செல்லாமலும், நெல் மூட்டைகளை மூடுவதற்கு போதுமான தார்ப்பாய் இல்லாததாலும், பத்தாயிரம் நெல் மூட்டைகளை திறந்த வெளியில் வைத்துள்ளனர்.

இதனால் நெல் முளைத்தும் மக்கியும் சேதமடைந்து காணப்படுகிறது. பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சாகுபடி செய்யப்பட்ட இந்த நெல் மூட்டைகள் இப்படிசேதமடைந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதற்கு அரசு அதிகாரிகளே முழு காரணம் என, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

;