tamilnadu

img

பழையாறு துறைமுகம் 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத படகு அணையும் தளத்தில் உடைப்பு

சீர்காழி, மே 16-கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுக படகு அணையும் தளத்தில் உடைப்பு ஏற்பட்டு 2 வருடங்களுக்கும் மேலாகியும் மேம்படுத்தநடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப் பப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக உள்ள இந்த துறைமுகத்தில் 350, விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப் படகுகள் மூலம்தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர்கள்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் இத்துறைமுகத்தில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் படகு அணையும் தளம் புதிதாக உலக வங்கி நிதி உதவியுடன் மேம்படுத்தப்பட்டு 4 வருடங்கள் ஆகிறது. ஆனால் கட்டப்பட்டு இரண்டே வருடங்களில் துறைமுக, படகு அணையும் தளத்தில் பல இடங்களில் உடைப்புஏற்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில்கடலுக்கு செல்லும் போது தடுமாறி கிழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் தரமற்ற முறையில் படகுஅணையும் தளம் கட்டப்பட்டுள்ளதால் கடல்நீரை ஒட்டியுள்ள பகுதியில் உடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே படகு அணையும் தளத்தை தரமானதாகவும் மீண்டும் புதிதாகக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தி.மு.க மீனவரணி துணை அமைப்பாளர் பொன்னின்செல்வன், மீன்பிடி துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.