தரங்கம்பாடி, செப்.3- நாகை மாவட்டம் திருக்கடையூர் கிராம நிர்வாக அலு வலகத்தில் செவ்வாயன்று முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுவதாக வருவாய்த்துறை சார்பில் அறிவித்திருந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் மனுக்க ளோடு திருக்கடையூர் விஏஓ அலுவலகம் வந்தனர். அதி காரிகள் ஒருவரும் இல்லாமல் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு பல மணி நேரம் காத்திருந்த பொது மக்கள் மனுக்களை வாசலிலேயே வைத்து விட்டு திரும்ப சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, முகாம் நடைபெறும் என அறிவிப்பு செய்து விட்டு அலு வலகத்தை பூட்டி சென்றது கண்டனத்திற்குரியது. பிள்ளை பெருமாநல்லூர், காழியப்பநல்லூர், திருக்கடையூர் கிராம விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை சார்பில் ஒரு அதி காரியும் இல்லாமல் பூட்டிக் கிடந்ததால் மனுக்களை வாச லிலேயே வைத்து விட்டு வந்தோம் என ஏமாற்றத்துடன் கூறினர்.