மணல் கடத்தியவர் கைது
சீர்காழி, அக்.8- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்(24) என்ப வர் கொள்ளிடம் ஆற்றில் பாலுரான்படுகை கிராமத்தில் அவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி மணல் எடுத்து ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். பாலு ரான்படுகை கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது, தகவல றிந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் காவ லர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று டிராக்டரை ஓட்டி வந்த செந்திலை கைது செய்து மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
நாகை கொள்ளிடத்தில் கடும் மணல் தட்டுப்பாடு அரசு வீடுகள் பணி பாதிப்பு
சீர்காழி, அக்.8- கொள்ளிடம் பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட் டால் அரசு வீடுகள் கட்டும் பணி மந்தமடைந்துள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் பசுமை வீடுகள் கட்டும் பணி யும், பிரதம மந்திரியின் வீடுகள் திட்டத்தின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அதிகாரி களும், பயனாளிகளும் வீடுகள் கட்டும் பணியை துரிதப் படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வீடு கட்டுவதற்கு உரிய சிமெண்ட் மூடைகளும், கம்பி களும் அரசு சார்பில் எளிதில் கிடைத்து விடுகிறது. செங்கல் மற்றும் கருங்கல் ஜல்லிகளையும் பயனாளிகளால் எளிதில் பெற முடிகிறது. ஆனால் மணல் கிடைக்காததால் வீடுகள் கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த காலத்திற்குள் வீடுகளை கட்டி முடிக்க முடியவில்லை. இந் நிலையில் எம்-சாண்ட் எனப்படும் செயற்கை மணல் எளி தில் கிடைத்தாலும் விலை உயர்ந்து இருப்பதாலும் இந்த எம்-சாண்ட் மணலை இப்பகுதி பயனாளிகள் பெரிதும் விரும்பு வதில்லை. மணலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்ற னர். கொள்ளிடம் ஒன்றிய கிராமங்களில் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட அரசு கான்கிரீட் வீடுகள் மணல் கிடைக்கா ததால் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு கான் கிரீட் வீடுகள் கட்டும் பணியை துரிதப்படுத்தி விரைவில் கட்டி முடிக்கும் வகையில் அரசு உடனடியாக வீடு கட்டும் பயனாளி களுக்கு மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா துணைச் செயலாளர் சி.பாக்யராஜ், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலவேம்பு கசாயம் வழங்கல்
அறந்தாங்கி, அக்.8- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக செவ்வாய் அன்று நிலவேம்பு கசா யம் அன்னவாசல் நகர முக்கிய வீதிகளில் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மெஹா போன் முலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. கிளை நிர்வாகிகள் அமானுல்லா, காஜ மைதின், உமர் முக்தார், இமாம் அஹமது ஷா, அமீர் அப்பாஸ் ஹனிப் உள்ளிட்டோர் 600 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி னர்.