tamilnadu

img

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம்

சீர்காழி, செப்.12- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி யை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான அமரர் கே.பி.எஸ்.மணி நினைவை போற்றும் வகையில் தலைவர் கே.பி.எஸ்.மணி பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக செயல்பட்டு பல சமூக சேவைகளையும் ஜாதி, மதம், பேத மின்றி மக்கள் நலனுக்கான போராட்டங் களையும் செய்து வருகிறார். அவரது மகன் முன்னாள் சீர்காழி நகராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் கே.பி.எஸ்.எம்.கணிவண்ணன். மயிலாடுதுறையை தலைமை யாக கொண்டு புதிய மாவட்டமாக அறி விக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைவர் கே.பி.எஸ்.மணி பேரவையின் தலைவரும் முன்னாள் சீர்காழி நகராட்சி மன்ற தலைவர் வழக்க றிஞர் கே.பி.எஸ்.எம்.கணிவண்ணன் தலைமையில் சீர்காழியில் பழைய பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் சீர்காழி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கிள்ளி வளவன் வரவேற்புரையாற்றினார். கே.பி.எஸ்.மணி பேரவை நிர்வாகிகள் வீரபாண்டியன், அன்புராஜ், ஹரி கிருஷ்ணன், அமிர்தலிங்கம், ஆசை தம்பி, முத்துகுமார், தனசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தார்கள். காவிரிப் படுகை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் பா.ரவிச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்ட செய லாளர் பெரியார் செல்வம், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் ராஜராஜன், சுந்தரம், மாற்றுத்திறனாளி  தாஹா, சி.பி.எம்.எல் குணசேகரன் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞ ரணி காங்கிரஸ் தலைவர் சரவணன், நலம் சுதாகர், வழக்கறிஞர் கார்த்திக், வி.சி.க செய்தி தொடர்பாளர் தேவா, வி.சி.க முன்னாள் மாவட்ட செயலா ளர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.  மயிலாடுதுறை கோட்டத்தில் வசித்து வருகின்ற மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக தனி மாவட்டமாக அறி விக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். மயிலாடுதுறை கோட்டத்தில் ஏறத்தாழ 12,00,000 மக் கள் வசித்து வருகின்றனர். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறி வித்தால் தமிழக அரசு அறிவித்தபடி புதிய மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், புதிய தொழிற் சாலைகள் உருவாகும்.  தமிழகத்தில் எந்த பகுதி மக்க ளுக்கும் இல்லாத துயரம் மயிலாடு துறை, வைதீஸ்வரன்கோயில், சீர்காழி, கொள்ளிடம், மணல்மேடு, குத்தாலம், பூம்புகார், செம்பனார் கோயில், தரங்கம்பாடி, மங்கை நல்லூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்னொரு மாநில பகுதி யான காரைக்கால் வழியாக நுழைவு வரி செலுத்தியோ அல்லது இன்னொரு மாவட்ட வழியாக திருவாரூர் வழி யாகவோ தான் மாவட்ட தலைநக ருக்கு செல்ல முடியும் என்ற அவல நிலை இருந்து வருகிறது. இதனால் அவசர மருத்துவ சிகிச்சை கிடைக்கா மல் பலர் இறக்க நேரிடுகிறது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.