சீர்காழி, பிப்.11- கொள்ளிடம் பகுதியில் சென்ற வருடத்தை விட நடப்பாண் டில் மணிலா பயிர் சாகுபடி பரப்ப ளவு அதிகரித்துள்ளது என்று விவ சாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சஞ்ஜீவிராயன் கோயில், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் நேரில் மணிலா (நிலக்கடலை) சாகுபடியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கொள்ளிடம் வட்டாரத்தில் வழக்க மாக 200 எக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே இதுவரை நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந் தது. ஆனால் நடப்பாண்டில் 300 எக்டேருக்கும் மேல்நிலப்பரப் பில் மணிலா பயிர் சாகுபடி செய் யப்பட்டுள்ளது. நெல்லுக்கு பதிலாக லாபம் அதிகம் கிடைக்கும் பணப்பயி ராக இருப்பதால் நடப்பாண்டில், மணிலா பயிர் அதிகம் செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வரு கின்றனர். மணிலா பயிருக்கு வேளாண் துறை மூலம் மானிய விலையில் விதை மற்றும் உயிர் நுண்ணூட்டம் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் மேலும் மணிலா பயிரை சாகுபடி பரப்ப ளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கொள்ளிடம் பகுதியில் விவசாயி கள் மணிலா பயிரை சாகுபடி செய்ய தீவிரம் காட்டி வருகின்ற னர் என்றார். வேளாண் அலுவலர் விவேக், உதவி அலுவலர்கள் வேதைராஜன், பாலச்சந்தர், மகேஷ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.