பொன்னமராவதி, பிப்.26- பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி மன்ற த்தின் சார்பில் வாராப்பூர் கிராம சமுதாயக் கூடத்தில் கால்நடைகளுக்கு உருவா கும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசி குறித்து விவாதிக்க சிறப்பு கிராம சபை செவ்வாயன்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் இ.மலர்விழி நாகராஜன் தலைமை வகி த்தார். கோமாரி நோய் தடுப்பு முறைகள் பற்றி கால்நடை மருத்துவர் எம்.தியாகராஜன் பொது மக்களிடம் விளக்கினார்.