tamilnadu

img

கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூன்13- கரூர் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்களுக்குத்  திணிக்கப்பட் டுள்ள பணிச் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற கோரி கடந்த 5.6.19 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு செவிலியர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் நல்லம்மாள் உள்ளிட்ட 4 செவி லியர்களையும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற அரசு ஊழியர் சங்க மாநிலத்  துணைத்தலைவரும், அனைத்து மருந்தாளுனர் சங்க மாநி லத் தலைவருமான எம்.சுப்பிரமணியன் ஆகிய 5 பேரைத் தற்காலிகப்  பணிநீக் கம் செய்த கரூர் அரசு மருத்துவக் கல் லூரி முதல்வரைக் கண்டித்தும், தற்கா லிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் புதன்கிழமை மாவட்ட இணைச் செயலாளர் து.இள வரசன் தலைமையில் நாகை அரசு மாவட்டத்  தலைமை மருத்துவமனை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழ கன் விளக்கவுரையாற்றினார். நாகைத் தொழிற்சங்க் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் சு.மணி, மருத்துவத் தேர்வுக் கழக செவிலியர் மேம்பாட்டுச் சங்க மாவட்டத் தலைவர் ரேவதி ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ஜோதிமணி நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் கே. இராஜூ, வட்டத் தலைவர் சி.பாலசுப்பிர மணியன், ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.ஆசைத்தம்பி, நாகை வட்டத் தலைவர் எம்.பி.குணசேகரன், ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத் தலை வர் வி.பாலசுப்பிரமணியன், அரசு செவிலியர் சங்க மாவட்டத் தலைவர் ப.ஜீவானந்தம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் பா.ராணி நன்றி கூறினார். இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி அன்று மதியம் மாவட்ட ஆட்சி யரகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.