நாகப்பட்டினம், ஆக.21- நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரையில் உள்ள கோடிமாரியம்மன் கோவிலில், கடந்த ஜூலை 14 அன்று சிலரால் மாரியம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் களவாடப்பட்டன. இது குறித்து, காவல்துறையின் தனிப்படையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். இந்நிலையில் செவ்வாய்க் கிழமை திருக்குவளை அருகே உள்ள ராமர்கோட்டகம் என்னும் இடத்தில் உதயராஜ் என்பவரது வீட்டில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களவாடப்பட்ட வள்ளி, தெய்வானை சிலைகள் மீட்கப்பட்டன. இதில் உதயராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.