மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்த லில் 1806 ல் ஆரம்பிக்கப் பெற்ற அன்பநாதபுரம் வகை யறா அறக்கட்டளை, 1955இல் ஏ.வி.சி கலைக் கல்லூரியை ஆரம்பித்ததன் மூலம் கல்வி பணியை துவங்கி, 1983இல் ஏ.வி.சி பல்தொழில் நுட்பக் கல்லூரி யையும், 1996ஆம் ஆண்டு “ஏ.வி.சி காலேஜ் ஆப் என்ஜி னியரிங்” என்ற பெயரில் பொறியியல் கல்லூரியை யும் தொடங்கியது. பொறியியல் கல்லூரி யில் 7 இளநிலைப் பிரிவுகள், 5 முதுநிலைப் பிரிவுகள், பொ றியியல் மற்றும் தொழில்நுட் பம், கணினி பயன்பாட்டுத் துறை மற்றும் மேலாண்மை துறைகளின் மூலம் பயிற்று விக்கப்படுகின்றன. பெங்க ளூர் தேசிய தர மதிப்பீட்டுக் குழு இக்கல்லூரிக்கு NAAC “¡õ + +” (2 nd Cycle ) தரச் சான்றிதழை வழங்கி யுள்ளது. மேலும் இக்கல்லூ ரியில் இயந்திரவியல, கணினி பயன்பாட்டுத் துறை மற்றும் வேதியியல் துறை ஆகியவைகளின் ஆராய்ச்சி மையமாக (Research cen tre) செயல்பட அண்ணா பல் கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளில் சுமார் 6000 பொறியாளர்கள் இங்கு பயின்று இந்திய அளவிலும், உலக அளவிலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி வளாகத்தி லேயே மாணவர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு எனத் தனித்தனி விடுதி கள் உள்ளன. பெண்க ளுக்கென இந்த கல்லூரி வளாகத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பெண்கள் விடுதி சிறப்புடன் இயங்கி வருகின்றது. ஏழை, எளிய மக்களுக்கென இயங்கி வரும் ஏ.வி.சி கல்வி நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் இச்சிற்றூரில் அமைந்துள்ளது. இப்பொறியியல் கல்லூரி 30 ஏக்கர் பரப்பள வில் இக்கல்லூரி இயங்கி வருகின்றது. சுமார் 1500 மாண வர்கள் இங்கு பயில்கின்ற னர். 123 பேராசிரியர்கள், 128 ஆசிரியரல்லா பணி யாளர்கள் கல்விப்பணி ஆற்றி வருகின்றனர். வசதியான கட்டிடங்கள், காற்றோட்டமான வகுப்ப றைகள், 8239 சதுர அடி பரப்பளவுள்ள தனித்த நூலக கட்டிடத்தில் 58,897 நூல்க ளுடன் கூடிய நூலகம், கணிப்பொறி ஆய்வகம், ஆய்வகக் கூடங்கள், இணையதள நூலகம், எந்த நேரமும் பயன்படுத்தக் கூடிய 120 M¡õPS இணைய தளம், 24 மணிநேர மின்வசதி, பாதுகாவல், வங்கி, ஏ.டி.எம். என பல சிறப்பு வசதிகளு டனும், தகுதிகளுடன் இயங்கும் இப்பொறியியல் கல்லூரியை கல்லூரியின் இயக்குனர் முனைவர் எம்.செந்தில்முருகன், முதல்வர் முனைவர் சி.சுந்தர்ராஜ் மற்றும் துணை முதல்வர் முனைவர் எஸ்.செல்வ முத்துக்குமரன் ஆகியோர் சிறப்பான முறையில் வழிநடத்தி செல்கிறார்கள். மேலும் இக்கல்லூரி ISO 9001:2015 எனும் தகுதிச் சான்றிதழையும் பெற்றிருக்கி றது. சிதம்பரம், திருவாரூர், கும்பகோணம், பொறை யார், மணல்மேடு, பூம்புகார், திருப்பனந்தாள், மங்கை மடம், காளி ஆகிய வெளி யூரிலிருந்து வரும் மாண வர்களுக்கான 32 பேருந்து கள் இக்கல்லூரி மூலம் இயக் கப்படுகின்றன. ஏ.வி.சி கல்வி நிறுவ னங்களின் தலைவர் (பொ) டாக்டர் என்.விஜய ரங்கன், செயலர் கார்த்தி கேயன், பொருளாளர்என்.ஞானசுந்தர் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காக தங்களின் அரிய பணிகளை செய்து வருகின்றனர்.