tamilnadu

மனிதர், விலங்குகளுக்கு நோய் ஏற்படுத்தும்

சீர்காழி, நவ.6- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள், வீட்டுத் தோ ட்டங்கள், ஆறு மற்றும் குளங்களின் கரைகள் மற்றும் குடியிருப்புக ளைச் சுற்றியும் சாலை ஓரங்க ளிலும் பார்த்தீனிய விஷச் செடிகள் அதிக அளவில் மண்டிக் கிடக் கின்றன.  சமீப காலமாக இந்த செடிக ளின் வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது. சுற்றுப்புற சுகாதாரத்தை பாதிக்கும் இந்த செடிகள் மனி தனுக்கு நோய் வருவதற்கு காரண மாக உள்ளன. இந்த செடிகள் உடலில் பட்டால் முதலில் அரிப்பு ஏற்படும், பின்னர் சுவாசக் கோ ளாறுகளை ஏற்படுத்தும். இதனை அலட்சியம் செய்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த விஷத் தன்மை வாய்ந்த பார்த்தீனியச் செடிகள் அனைத்து கிராமங்களி லும் உள்ளன.  இந்தச் செடிகளின் தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தா ததால் இதனை அழிக்காமல் உள்ள னர். வயல் மற்றும் வாய்க்கால் கரைப்பகுதிக்கு மேய்வதற்காகச் செல்லும் ஆடு மற்றும் மாடுகள் மீது இந்த செடிகள் பட்டு வீட்டிற்கு அவை மீண்டும் வரும்போது அந்த விஷத்தன்மை காற்றின் மூலம்  பரவி நோய் ஏற்பட வாய்ப்புண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கின்ற னர்.  எனவே இந்த பார்த்தீனியச் செடிகளை அகற்றவும் அதன் நச்சுத்தன்மை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.