நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.எல்.ஏ பவுன்ராஜ் மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார். தலைமையாசிரியர் திருமாவளவன், ஊராட்சி தலைவர் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.