நாகப்பட்டினம், டிச.23- உள்ளாட்சித் தேர்தலில், நாகை ஒன்றியம், சிக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆர்.விமலாராஜா, நாகை மாவட்ட ஊராட்சி வார்டு-15 க்கு வழக்கறிஞர் ப.சுபாஷ்சந்திர போஸ்(தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர்) ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்கள் உள்ளிட்டோருக்கு வாக்குக் கேட்டு, சனிக்கிழ மைஅன்று, சி.பி.எம்.அரசி யல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், நாகை மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமானநாகை மாலி ஆகியோர் வாக்குக் கேட்டு, மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். நிகழ்ச்சியில் வேட்பா ளர்கள் விமலாராஜா, ப. சுபாஷ்சந்திரபோஸ், மாவட் டக்குழு உறுப்பினர்கள் பி. கே.ராஜேந்திரன், எம்.சுப்பிர மணியன், கே.செந்தில் குமார் மற்றும் வி.வி.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் கள் பலரும் கலந்து கொண்ட னர்.
வெண்மணி
வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில், கீழ்வேளூர் ஒன்றியம், வெண்மணி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பி.மோகனுக்கு வாக்குக் கேட்டு, சி.பி.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளருமான பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் நாகைமாலி ஆகி யோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து, கீழ வெண்மணி, நுழைவு வாயில் பகுதி, மேலவெண்மணி, மயிலாங்குடி ஆகிய பகுதி களில் ஜி.ராமகிருஷ்ணன், நாகைமாலி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வாக்கு கள் கேட்டனர்.
ஆதமங்கலம்
கீழ்வேளூர் ஒன்றியம், ஆதமங்கலத்தில், சி.பி.எம். வேட்பாளர்களாக, ஆதமங்க லம் ஊராட்சி மன்றத் தலைவ ருக்குப் போட்டியிடும் அகிலா சரவணன், மாவட்ட ஊராட்சி வார்டு-16 க்குப் போட்டியிடும் எஸ்.சுபா தேவி, ஊராட்சி ஒன்றிய வார்டு-10 க்குப் போட்டியிடும் ஜி.ஜெயராமன் உள்ளிட்டோ ருக்கு வாக்குக் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் பெ.சண் முகம் பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வுகளில் வேட்பாளர்கள் ஜி.ஜெயரா மன்(சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர்), எஸ்.சுபாதேவி( மாதர் சங்க மாவட்டப் பொருளாளர்), பி.மோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.எம்.அபு பக்கர், எம்.செந்தில்குமார், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டி.ராஜேந்திரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவக்குமார் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.