tamilnadu

img

வேட்டங்குடியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சீர்காழி: வேட்டங்குடியில் கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 4 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. நாகை மாவட்டம் வேட்டங்குடி கிராமத்தில் சாலையோரம் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து அதிலிருந்து ஒரு வார காலமாக தண்ணீர் வெளியேறியதால் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கும் அசுத்தம் கலந்த மழை நீரும் கூட்டு குடிநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் வழியே தண்ணீர் கலந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த உடைப்பால் தண்ணீர் இக்குழாயின் வழியே செல்லும் போதெல்லாம் வெளியேறி சாலையில் தேங்கி விடுகிறது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இந்தத் தண்ணீர் அனைவருக்கும் குடிநீராகப் பயன்படுகிறது. இந்தக் குடி நீரில் அசுத்தநீர் கலந்து செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் 4 அடிக்கு மேல் ஆழத்திற்கு தண்ணீர் எப்போதும் தேங்கியே கிடப்பதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் சாலையின் முன்பகுதிக்கு வந்து சாலையோர பள்ளத்தில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக உடைந்த குழாயை அடைக்கவும், பள்ளத்தில் மண்ணைப் போட்டு நிரப்பி ஆபத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எண்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.