tamilnadu

img

வாழ்வாதார உதவிகள் கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மே 9- கொரோனா பாதிப்புக் காரணமா கத் தொடர்ந்து ஊரடங்கு நிலவுவதால், வேலையின்றியும், வறுமை காரணமாக வும் மாற்றுத் திறனாளிகள் அல்லற்படு கின்றனர். இவர்களுக்கு வாழ்வாதார உதவிகளும் நிதி உதவியும் உடனடியாக அரசு வழங்கி உதவ வேண்டும் என நாகை மாவட்டம் முழுவது 45 இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பாக, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகை மாவட்டத்தில் வேதார ணியம் ஒன்றியத்தில் -5 இடங்கள், கீழை யூர் ஒன்றியம்- 6 என 45 இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் மாற்றுத்திறனாளி கள் சங்கம் சார்பில் 604 பேர் பங்கேற்ற னர்.