tamilnadu

img

பண மோசடி கும்பலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆக.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம், திருக்கடை யூரில் மாவட்டக்குழு உறுப்பினர் டி. சிம்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று கடைவீதி யில் நடைபெற்றது. புகழ் பெற்ற ஆன்மீக தலமான திருக்கடையூருக்கு நாள்தோறும் ஆயி ரக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதி களிலிருந்து வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான தங்கும் விடுதி களும், உணவு விடுதிகளும், கடை களும் உள்ளன. நாளுக்கு நாள் அதி கரிக்கும் பக்தர்களின் வருகையை பயன்படுத்தி வெளியூரை சேர்ந்த பல தொழிலதிபர்கள் தங்கும் விடுதிகளை தொடர்ந்து கட்டி வருவாய் ஈட்டி வரு கின்றனர். பணம் புரளும் திருக்கடையூரில் சட்டவிரோத சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டு வரு கிறது. இந்நிலையில் நாகப்பட்டி னத்தை சேர்ந்த ஒரு நபர் கோயிலுக்கு அருகாமையில் மேல மடவிளாகத் தெருவில் தங்கும் விடுதி ஒன்றை சட்ட விதிகளை மீறி கட்டுமான பணிகளை துவங்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஒரு மோசடி கும்பல் பல லட்சம் கேட்டு மிரட்டி வாங்கியதோடு, மார்க்சிஸ்ட் கட்சியையும் தவறுதலாக பயன்படுத்தி யது தெரிய வந்ததையடுத்து அக்கும் பலை கண்டித்தும், பொதுமக்களி டையே மோசடி பேர்வழிகளை அம்ப லப்படுத்தும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலா ளர்கள் ஜீவானந்தம், பரமசிவம், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இராசை யன், ரவிச்சந்திரன் வட்டக்குழு உறுப்பி னர்கள் கோவிந்தசாமி, காபிரி யேல் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். முன்னதாக கட்சி அலுவலகத்திலி ருந்து 300க்கும் மேற்பட்டோர் பேரணி யாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.