tamilnadu

img

பேருந்து விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு சிபிஎம் ஆறுதல் தீவிர சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம், நவ.25- வேதாரணியத்திலிருந்து ஞாயிற்றுக் கிழமை மதியம் தனியார் பேருந்து ஒன்று 105 பயணிகளுடன் தலைஞாயிறு வழியாகத் திருவாரூக்குப் பயணித்த போது ஆலங்குடிப் பகுதியில் ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்ததில் பயணிகள் படுகாயமடைந்த னர். மறுபுறம் பேருந்து கவிழ்ந்திருந் தால் நதியில் மூழ்கிப் பலர் பலியாகி இருப்பார்கள்.  பேருந்தை ஓட்டியவர் திருவாரூர் மாவட்டம், வேல்குடியைச் சேர்ந்த சு.ரமேஷ்(41) என்பவர், தப்பித்து ஓடி விட்டார். நடத்துநர் காட்டாத்துக் குளத்தைச் சேர்ந்த ராஜா(33) வயிற்றில் அடிபட்டுத் திருவாரூர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் 58 பேர் படுகாயமுற்றனர். இதில் 48 பேர் நாகை மாவட்ட அரசு மருத்துவமனையி லும், ஒரு சிலர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைஞாயிறு பகுதியை ஒட்டி, வடக்கே ஓடுகிறது அரிச்சந்திரா நதி. தலைஞாயிறுக்கும் ஆலங்குடிக்கும் இடையே ஆற்றின் தென்கரையில் சாலை செல்கிறது. சாலையை அக லப் படுத்தியதால், அரிச்சந்திரா நதி மிகவும் குறுகிப் போய் விட்டது. இத னால் வெள்ளக் காலங்களில் இந்த நதி யில் உடைப்பு ஏற்படுவதும் உண்டு.  பேருந்து செல்வதற்காகச் சாலை அகலப் படுத்துவதற்காகவும் பாலங்கள் கட்டுவதற்காகவும் எப் போது பார்த்தாலும் இங்கு ஆமை வேகத்தில் அவ்வப்போது வேலை நடந்து கொண்டே இருக்கும். இத னால், மாற்றுச் சாலை மண்ணால் அமைக்கப்பட்டிருக்கிறது. மழையில் இந்தச் சாலை சேறும் சகதியாகவும் மாறிப் போயிருக்கிறது. ஆலங்குடிச் சாலை மேட்டுப் பகுதியாகவும் தலை ஞாயிறிலிருந்து வரும் சாலை தாழ்வாக வும் இருப்பதால், ஆலங்குடி மேட்டுப் பகுதிக்கு வாகனங்கள் ஏறும்போது சில நேரங்களில் விபத்துகள் ஏற்படு கின்றன. எப்போது பார்த்தாலும் இங்கு பாலம் கட்டுவதும், சாலை போடுவது மாகப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் இப்பகுதியைக் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.   நாகை மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள 48 பேர்களுள் பெரும்பாலும் பெண்கள். 5 பேருக்குக் கைகள் முறிவு,15 பேருக்கு எலும்பு முறிவு, பலர், கை, கால்கள் தலைகளில் பலத்த காயமுற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இவர்களை, ஞாயிறு இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, விசாரித்து ஆறுதல் கூறி னார். உடனடியாக மருத்துவமனைக் கண்காணிப்பாளருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் செல்பேசியில் தொடர்பு கொண்டு, பேருந்து விபத்தில் படுகாயமுற்று மருத்துவ மனையில் சேர்க்கபட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து அவர்களைக் காப் பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அங்குப் பணியிலிருந்த மருத்துவர்க ளையும் சந்தித்து உடனடியாக உரிய சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். சி.பி.எம்.மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா, பாப்பாகோயில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோ.முருகையன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. சிவகுமார் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் துணைச் செயலாளர் வி.வி. ராஜா மற்றும் வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.பி.மார்க்ஸ், ஏ.அறிவழ கன், சாமித்துரை, உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.