சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியம் பச்சை பெருமாநல்லூர் ஊராட்சி ஜீவா நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்ட குழு உறுப்பினர் கே.கேசவன் தலைமையில் கொரோ னா தொற்று - ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வை சீரழிக்கும் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து அகில இந்திய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. வி. சிங்காரவேலன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ கலந்துகொண்டு உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.