நாகப்பட்டினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் கல்விக் குழுவின் சார்பில் நாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இளம் கம்யூனிஸ்டுகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து துவக்க வுரையாற்றினார். காலை வகுப்பில் சாதி, இடஒதுக்கீடு, சாதிய அமைப்பு எனும் பொருளில் சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். மாலையில் வகுப்பில் ‘மார்க்சியத் தத்துவம், ஓர் அறிமுகம் என்னும் பொருளில் திருச்சி அன்வர் விரிவுரையாற்றினார்.