tamilnadu

img

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

செம்போடை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதா ரண்யத்தை அடுத்த  செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரி மற்றும் ஆர்.வி. பாலிடெக்னிக் கல்லூரி யின் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கருத்த ரங்கு திங்கட்கிழமை நடைபெற்றது. ஆர்.வி. கல்வி நிறுவனங்க ளின் நிறுவனர் டாக்டர். ஆர். வரதராஜன் தலைமையில், ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் செயலர் ஆர்.வி. செந்தில் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.  ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் என. கோவிந்தராஜு, பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் என். செந்தில்வேலன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.யோகா னந்த், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஏ.பக்கிரிசாமி மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். மின்னணு வியல் துறைத்தலைவர் ஜி.சுந்தர், கொரோனா வைரஸ் பரவும் விதம் மற்றும் தடுப்பு முன்னசரிக்கை குறித்து விளக்கி கூறினார்.  முன்னதாக பொறியியல் கல்லூரி கணினி துறைத்தலைவர் ஏ.ஹேமலதா வரவேற்றார். பொறியியல் மின்னியல் துறைத் தலைவர் எஸ். சுரேஷ் நன்றியுரையாற்றினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் டி. சிவக்குமார், ஜி. ஈஸ்வர விஜயன் மற்றும் பொறியியல் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ். லியோபிரபு ஆகியோர் செய்தனர்.