tamilnadu

கட்டுமானத் தொழிலாளர்  சங்க நாகை பேரவை

நாகப்பட்டினம், பிப்.22- கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்டப் பேரவை, அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் சீனி.மணி தலைமை வகித்தார். சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பி.எம்.லெனின் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ் வேலை அறிக்கையும் பொருளாளர் ஏ.ரமேஷ் நிதி நிலை அறிக்கையும் முன் வைத்தனர். சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முனியாண்டி, அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், அனைத்துத் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவீந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குருசாமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.பி.வசந்தி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் நிறைவுரையாற்றினார். ஜே.ஏ.ரகுமான் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்தலில் மாவட்டத் தலைவராக பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளராக ஏ.ரவிச்சந்திரன், பொருளாளராக ஜே.ஏ.ரகுமான், துணைத் தலைவராக என்.லெட்சுமணன், துணைச் செயலர்களாக ஆர்.ரவீந்திரன், எஸ்.சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தைப் புத்துணர்வோடு வலிமையாக்குவது என உறுதியேற்கப்பட்டது.