நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவப்புலம் தோழர் வி.மீனாட்சி சுந்தரம் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகள் அருந்தவப்புலத்தில் வியாழனன்று நடைபெற்றன.
‘மீயன்னா’ என்றும், ‘வீ.எம்.எஸ்.’ என்றும் அழைக்கப்பட்ட தோழர் வி.மீனாட்சிசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட நாகைவட்டச் செயலாளராகவும் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளராகவும் வெண்மணி வீரத் தியாகிகளின் போராட்டத் தளபதியாகவும் உழைக் கும் மக்கள் உரிமைக்காகப் பல்வேறுவீரம் செறிந்த போராட்டக் கள வீரராகவும் திகழ்ந்தவர். 21 மாதங்கள் இயக்கத்தலைவர்களோடு கடலூர் மத்தியச் சிறையில் இருந்தவர். அவரின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சிகள் அருந்தவப்புலத்தில் சிபிஎம் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு தலைமையில் நடைபெற்றன.
தோழர் வீ.எம்.எஸ். இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு மேடைக் கொடிக் கம்பத்தில்கட்சிக் கொடியை, மாவட்டச் செயலாளர் நாகைமாலி ஏற்றிவைத்தார். தொடர்ந்து, இல்லத்தில் தோழர் வீ.எம்.எஸ். உருவப் படத்திற்கு அவரதுதுணைவியார் மீ.காசியம்மாள், குடும்பத்தினர், நாகைமாலி, ஏ.வேணு,சிபிஎம் வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, கே.அலெச் சாண்டர், வி.ராஜகுரு, ஏ.ராஜா மற்றும்ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கோவை மாநகரில் ஆகாஷ் எலெக்ட்ரிக் கம்பனி நடத்தி வரும் வீ.எம்.எஸ். புதல்வர் மீ.ஜோதிபாசு, தீக்கதிர் ஓராண்டுச் சந்தாவை நாகைமாலியிடம் அளித்தார். தனது தந்தையாரின் நினைவாக அருந்தவப்புலத்தில் படிப்பகம் ஒன்று துவங்கி, அதில் தீக்கதிர் உட்பட இயக்க இதழ்கள் மற்றும்நாளிதழ்கள் வைக்கபட்டு பொதுமக் கள் படித்திட வசதி செய்து தரப்படும் எனத் தெரிவித்தார். பின்னர், அருதவப்புலம் கடைத்தெருவில் நாகைமாலி செங்கொடியை ஏற்றி வைத்துப்பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.