சீர்காழி, அக்.28- நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தென்னை மரம் ஏறும் கருவியை எப்படி பயன்படுத்தி மரம் ஏறுவது என்பது குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி நடை பெற்றது. வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், தென்னை விவசாயிகளுக்கு மரம் ஏறும் கருவியை வழங்கி செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார். வட்டார வேளாண் அலுவலர் விவேக், அத்மா திட்ட மேலாளார் ரேகா, துணை மேலாளர் சவுந்தர்ராஜன், வேளாண் உதவி அலுவலர்கள் வேதையராஜன், மகேஸ்வரன் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.