tamilnadu

img

மணல் கடத்தும் வாகனங்களால் படுமோசமான ஆற்றங்கரை சாலை

சீர்காழி, டிச.11- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டம் ஆற்றின் வலது கரை சாலை, கொள்ளிடம் சோதனைச் சாவடியிலி ருந்து வடரெங்கம் கிராமம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையின் வழியே செல்வோர் மிகுந்த சிரமத்து டன் சென்று வருகின்றனர்.  கொன்னக்காட்டுப்படுகை கிரா மத்தில் ஆற்றங்கரை சாலை மெலிந்து நூல் போன்று காணப்படுகிறது. கொள் ளிடம் ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதால், மணல் ஏற்றி வரும் டிராக்டர்கள் மற்றும் டயர் வண்டிகள் அடிக்கடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து சாலையில் ஏறும் போது சாலை உடைந்து போயுள்ளது. இரவு நேரங்களில் மெகா மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்ப தாகவும் கூறப்படுகிறது. கொன்னக்காட்டுப்படுகையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தினந் தோறும் இரவு நேரங்களில் மாலை 7 மணி முதல் காலை ஆறு மணி வரை மணல் கொள்ளை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இரவில் தினந்தோறும் 10 டிராக்டர்கள் மற்றும் 20 மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வரப் பட்டு இரவோடு இரவாக வெளியூர் களுக்கு அனுப்பி விற்பனை செய்யப் படுவதாகக் கூறப்படுகிறது.                                             சுரங்கம், கனிமத்துறை கைகளில்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் கொள்ளி டம், ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டு வருவதால் வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதன் மூலம் ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமாக மாறி விட்டது. ஆற்றில் மணல் கொள்ளை யை தடுக்கும் அதிகாரம் பொதுப் பணித்துறையிடம் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வருட காலமாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. எனவே மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரம் பொதுப் பணித்துறையின் நீர் ஆதாரத்துறை யிடம் இல்லை. எனவே மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. எங்க ளிடம் அந்த அதிகாரம் இருந்த போது மணல் கடத்தல் முழுமையாக கண்கா ணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது என்றார். மணல் கடத்தலை தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.