tamilnadu

img

4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை நாகையில் பிஎஸ்என்எல் ஊழியர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஏப்.15- பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் கோரி நாகப்பட்டினத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நாகை கிளைச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். ஒப்பந்தத் தொழிலாளர் சங்ககிளைச் செயலாளர் பிரகாஷ், தலைவர் மணிகண்டன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நாகை கிளை நிர்வாகி நா.ஜெயராமன், சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குருசாமி, துணைத் தலைவர் மனிவண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டஇணைப் பொருளாளர் முஜிபுர்ரகுமான் நன்றி கூறினார்.

;