tamilnadu

img

மகாத்மா காந்தி பிறந்த நாள் தில்லையாடியிலிருந்து திருப்பூருக்கு பாதயாத்திரை செல்லும் தம்பதி

தரங்கம்பாடி, அக்.3- மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த தம்ப தியர் நாகை மாவட்டம் தில்லையாடியிலிருந்து திருப்பூர் வரை பாத யாத்திரை பயணத்தை காந்தி ஜெயந்தியன்று தொடங்கினர். மதுரையைச் சேர்ந்த அகில இந்திய காந்திய இயக்க தேசிய ஒருங்கிணைப்புச் செய லாளர் எம்.கருப்பையா- மகளிர் பிரிவு தேசிய  ஒருங்கிணைப்புச் செயலாளர் கே.சித்ரா தம்பதி யர் காந்தியின் 150 வது பிறந்தநாளையொட்டி தஞ்சாவூர் காந்தி இயக்க அறக்கட்டளை, திரு வையாறு காந்தி பாரதி இளைஞர் மன்றம்  சார்பில் தில்லையாடியிலிருந்து திருப்பூர் வரை சுமார் 300 கி.மீ தூர பாத யாத்திரையை தொடங்கி யுள்ளனர். தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் பாதயாத்திரை தொடக்க  நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.ராஜ்குமார் மகாத்மா காந்தி, தியாகி வள்ளியம்மையின் சிறப்புகள், தியாக ங்களை எடுத்துக் கூறி பாத யாத்திரையை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். காந்திய இயக்க அறக்கட்டளை நிறுவனர் வே.கோபாலன், மேலாண் அறங்காவலர் இரா.மோகன், காந்தி பாரதி இளைஞர் மன்ற  தலைவர் ரமேஷ், வட்டார காங்கிரஸ் தலைவர்  ஜி.ராஜேந்திரன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன், கிராம பொது நலச் சங்க தலைவர் எஸ்.ஆறுமுகம், முன்னாள்  தலைவர் எஸ்.ஜெகதீசன், தில்லையாடி அருணாசலக் கவிராயர் இயல்-இசை-நாடக மன்ற அமைப்பாளர் நா.வீராசாமி, செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் வீ.தமிழன்பன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக ளின் நிர்வாகிகள், கிராம மக்கள் திரளானோர் பாதயாத்திரை மேற்கொள்ளும் தம்பதியரை வாழ்த்தி வழியனுப்பினர். முன்னதாக மகாத்மா காந்தி 150 வது நினைவு  தினத்தை போற்றும் விதமாக தியாகி வள்ளி யம்மை அரசு மேல்நிலைப் பள்ளியிருந்து, தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் வரை  முக்கிய வீதிகள் வழியாக கிராம மக்கள் காந்தி யின் உருவப்படத்துடன் பேரணியாக புறப்பட்டு  வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் கொள்கைகளை வலி யுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ள தம்ப தியர் மயிலாடுதுறை, கும்பகோணம், ஸ்ரீரங்கம்,  கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழி யாக சென்று அக்.12-ம் தேதி திருப்பூரில் பயண த்தை நிறைவு செய்கின்றனர்.