tamilnadu

img

ஏவிசி கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம்  

 மயிலாடுதுறை, செப்28- நாகை மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் ஆங்கில மொழியை அன்றாட வாழ்வில் வாய்மொழி வாயிலாகவும் எழுத்து வடிவிலும் எவ்வாறு திறமையாக பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமைவகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் கே.மேகநாதன், பேராசிரியர்கள் எஸ். சந்திரசேகரன், எம். வெங்கடேசன், எஸ். சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை ரைஸ் மைண்ட்ஸ் அகாடமி இயக்குநர் ஏ. ரமாதேவி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியைகள் எம்.கீதா, ஆர்.மல்லிகா அலுவலக பணியாளர் சத்தியா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.