நாகப்பட்டினம், ஜூன் 17- மக்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து நாகை வட்டம் திருமருகல் ஒன்றியம் கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான நாகைமாலி தலைமை வகித்துக் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால், பொன்.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிக்கல் கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்திற்கு சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து தலைமை வகித்து சிறப்புரை யாற்றினார். கீழையூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையேற்றார். வாட்டாக்குடியிலும் உம்பளாச்சேரியிலும் நடைபெற்ற போராட்டங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். வெள்ளப்பள்ளம், பனங்காடியில் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு விளக்கவுரையாற்றினார். கே.அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிந்தாமணி யில் கிளைச் செயலாளர் வேலுசாமி தலைமையில் கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் விளக்கவுரையாற்றினார்.
ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் ஒன்றியச் செய லாளர் வி.அம்பிகாபதி தலைமையிலும், ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் கோவை.சுப்பிரமணியன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. சின்னதும்பூரில் நடந்த போராட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் விளக்கவுரையாற்றினார். நாகை ஒன்றியம் செல்லூரில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடந்தது. கீழ்வேளூர் ஒன்றியத்தில் 20க்கு மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூரில் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.என்.அம்பிகாபதி, என்.எம்.அபுபக்கர் பங்கேற்றனர். கலசம்பாடி, புதுச்சேரியில் வி.தொ.ச. ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.ஜீவாராமன், வி.ச. ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல் ஆகியோர் தலை மையில் போராட்டம் நடந்தது. முட்டம் கடைத்தெருவில் ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்க ளில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், கே.செந்தில்குமார், வி.வி.ராஜா, விமலாராஜா, கே.மாரி முத்து, ஏ.கே.குமார் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நகரில் அவு ரித்திடலில் நாகை நகரச் செயலாளர் (பொ) சு.மணி தலை மையிலும் பழைய பேருந்து நிலையத்தில் சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.முனியாண்டி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ப.சுபாஷ்சந்திரபோஸ் சிறப்புரையாற்றினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் குண்டவெளி ஊராட்சி மீன்சுருட்டியில் அம்பிகா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் மீனா, ஒன்றிய குழு உருப்பினர் ரமேஷ, கொளஞ்சி கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
கட்சியின் தஞ்சை ஒன்றியம் சார்பில் வல்லம் அண்ணா சிலை அருகில், ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே.அபிமன்னன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஞான மாணிக்கம் கண்டன உரை நிகழ்த்தினர். ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சங்கிலி முத்து, வல்லம் பகுதி கிளை செயலாளர் என்.ஜி.அந்தோணி சாமி, க.பார்வதி, எஸ்.கருப்பையா, ஏ.ராஜாங்கம் கலந்து கொண்டனர்.
சீர்காழி
நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் எட்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமுல்லை வாசலில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வட்ட செயலாளருமான சி.வி.ஆர்.ஜீவானந்தம் உரையாற்றினார். கொள்ளிடம் கடைவீதியில் வட்டகுழு உறுப்பினர் விஜய், ஆச்சாள்புரத்தில் வட்ட குழு உறுப்பினர் இலட்சுமணன், ஆலாலசுந்தரம் ஊராட்சியில் குஞ்சு உரையாற்றினர்,
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் துரை.நாராயணன், எஸ். பாண்டிச்செல்வி, எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். திருவரங்கும் ஒன்றியம் ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஏ.ஆர்.பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச் சாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குன்றாண்டார் கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல் தலைமை வகித்தார்.
மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பீமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை ஒன்றியம் வண்ணாரப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் டி.லட்சா திபதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆவுடையர்கோவிலில் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறந்தாங்கியில் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, பொன்னமராவதியில் ஒன்றியச் செயலாளர் என். பக்ருதீன், அரிமளத்தில் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன், மணமேல்குடியில் ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன், விராலிமலையில் ஒன்றியச் செயலாளர் சா.தோ.அருணோ தயன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டங்க ளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ரூ.7500 6 மாதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை, ஆர்மரிகேட், ஏர்போர்ட், ரஞ்சிதபுரம், சுப்ர மணியபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு பகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பகுதிகுழு உறுப்பினர்கள் சீனிவாசன், மணிமா றன், புவனேஸ்வரி, துரைராஜ், விஜியேந்திரன், டிஆர்இயு ராஜா, பழனி, கவியரசன், வெங்கடேசன் கலந்து கொண்டனர். வாளவந்தான்கோட்டை புதுபர்மா காலனி கடைவீதி யில் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.
மகாலிங்கம், பழனி வேல், அடைக்கலமேரி கலந்து கொண்டனர். பூலாங்குடி காலனியில் ஒன்றியக்குழு உறுப்பினர் சுதாகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் சிறப்புரையாற்றினார். தெய்வநீதி, ராமமூர்த்தி, சுபாஷ்சந்திர போஷ் கலந்து கொண்டனர். ஊரக்கரையில் கிளை செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மேட்டுப்பாளையத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். துளையாநத்தத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் வீரவிஜயன் தலைமை வகித்தார். பைத்தம்பாறையில் ஒன்றியக் குழு உறுப்பினர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கோணப்பம்பட்டியில் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், காமராஜ். ஒன்றியக்குழு உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் தில்லையாடி, காட்டுச்சேரி பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். இலுப்பூர் கடைவீதியில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.இராசையன் தலைமை வகித்தார். திருக்கடையூரில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமை வகித்தார். திருவிளையாட்டம் கடைவீதியில் கிளை செயலாளர் வீ.குணாளன் தலைமையிலும், கொத்தங்குடி கிளை சார்பில் கிளை செயலாளர் என்.சந்திரமோகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலம்புதுக்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் கண்டன உரையாற்றினார்.