tamilnadu

3 குழந்தைகளின் தாய் பலி

சீர்காழி, ஏப்.2- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமம் நரியன் தெருவைச் சேர்ந்த கண்ணாமணி மனைவிசரளா(32). இவர் கடந்த 24-ந் தேதி இரவு மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் காபி தயாரித்துக் கொண்டிருந்த போதுசரளா அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவர், சீர்காழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குச்சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து கொள்ளிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தசரளாவுக்கு ஸ்ரீமதி (10), ஸ்ரீநிஷா (8), ஸ்ரீநித்யா (3)ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

;