புதுக்கோட்டை: குடிமராமத்து திட்டத்தின் பயனாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3.71 மீட்டர் உயர்ந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, தெரிவித்ததாவது. குடிமராமத்து திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 882 பணிகள் ரூ.43.80 கோடி செலவில் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்பொழுது பெய்துள்ள பருவமழையினால் 837.35 மில்லி மீட்டர் மழைநீர் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்டுள்ள மழைநீர் ஏரி, குளம், கண்மாய்களில் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொர்ந்து பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறையின் நிலநீர் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீர்மட்டமானது தற்பொழுது 3.71 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது. இப்பணியியை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்து வரும் விவசாயிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்குரியவர் என்றார்.