tamilnadu

நீட் தேர்வு தமிழில் எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம்

சென்னை, ஏப்.30-மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழில் எழுது வோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்கள் கடந்த 15 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதற்கிடையே பல மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு களில் பிழைகள் இருப்பதாகத் தகவல் கள் கிடைத்தன. இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டது.பிழைகள் இருந்தால் மாணவர்கள் மே 3 ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட்டை சரி செய்துகொள்ள அறிவுறுத்தப் படுகின்றனர்.தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;