tamilnadu

img

சமைத்த சத்துணவும் முட்டையும் வழங்குவது சாத்தியமே! - பி.இராமமூர்த்தி

தமிழகம் முழுவதும் சத்துணவு உண்ணும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயல்படாத நாள்களுக்கு சத்துணவுக்கு உரிய தொகையை மாணவ மாணவி யரின் வங்கிக் கணக்குகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளி வந்துள்ளது. மேலோட்டமாக இது மாணவர்களுக்கும் பெற்றோர்க ளுக்கும் வரவேற்கக் கூடியதாக தான் தோன்றும் .ஆனால் நடைமுறையில் இந்த யோசனை தவிர்க்கப்பட வேண்டியதா கும். அங்கன்வாடி குழந்தைகள் முதல் உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் சமைத்த சூடான சத்துணவும் அதற்குரிய முட்டையும் வழங்குவது தான் சரியானது. சிறந்தது. இதனை நடைமுறைப்படுத்த சிரமங்கள் தோன்றலாம் .அரசு நினைத்தால் முடியும் என்பதே பதில். சத்துணவு ஊழியர்களும் தயாராக உள்ளனர்.

தற்போது கொரோனா நோயைக் கண்டு பதற்றம், பயம் ஏற்பட்டு நோய் தடுப்புக்காக உலகமே ஊரடங்கு பின்னால் சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் எல்லா பணி களிலும் முடக்கம் ,சிரமம் ஏற்பட்டுள்ளது. அதில் பள்ளிகள் மூடப் பட்டதால் சத்துணவும் மார்ச் 17 முதல் நிறுத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், குழந்தைகள் படிக்க பள்ளிக்கு வருகை அதிகரிக்க வேண்டும் என்று சத்துள்ள காய்கறிகள் மற்றும் புரதச்சத்துள்ள பருப்புடன் கொண்ட சமைத்த சூடான சாம்பார் சாதம் வழங்கி பிள்ளைகள் ஆரோக்கி யத்துடன் வளர, பல  எதிர்ப்புகளுக்கு இடையேயும் பள்ளிகளில் சத்துணவு வழங்குவதை நிறைவேற்றினார். அப்படி சீரிய முறையில் நடைமுறைப்படுத்திட 2 லட்சம் பேரை சத்துணவு ஊழியர்களாக  நியமித்தார் .1982 இல் துவக்கப்பட்ட இத்திட்டம் 38 ஆண்டு காலமாக நங்கூரம் போட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றால் சத்துணவு ஏழைப் பிள்ளைகளுக்கு தினமும் தேவை என்ற காரணத்தினால் தான். தற்போது அதுவே ஒரு குழந்தை பள்ளிக்கு சென்றால் தினமும் மதியம் பல்வகை சத்துணவும் அத்துடன் ஒரு முட்டை,   உருளைக்கிழங்கு,  பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, வாழைப்பழம் வரை தரப்பட்டு சாப்பிட்டு வருகின்றனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக மார்ச் 17 முதல் இன்று வரை சத்துணவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மாற்று வழி மூலம் சத்துணவு வழங்கியிருக்க வேண்டும். தவறிவிட்டது. சுமார் 65 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு இன்றி பரிதவிக்கின்றனர். நோய் தோற்று வராமல் இருக்க ஊட்டச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியம் என்பது இன்றுள்ள சூழலில் தேவை . ஊட்டச்சத்து பாதிப்போடு கூடிய ஒரு தலை முறையையே உருவாக்குவதற்கு இது இட்டுச் செல்லும். அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட 10 மாநி லங்களில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியா விலேயே சத்துணவிற்கு பெயர் பெற்றதும்,  அரசுக்கு நற்பெயர் பெற்று கொடுத்த தமிழ்நாட்டிலும் இப்போதும் சூடான, சமைத்த உணவை வழங்குவது சாத்தியமானதுதான்.

திருவண்ணாமலை அனுபவம்

உதாரணமாக ஒன்றை இங்கே குறிப்பிடலாம். மார்ச் மாதம் பள்ளிகள் மூடி சத்துணவு நிறுத்தப்பட்டபோது,  திருவண்ணா மலை மாவட்ட ஆட்சித்தலைவர் மார்ச் 25 முதல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள ஏழை வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றவர்களை தேர்ந்தெடுத்து காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சூடான சத்துணவை சமைத்து வழங்கிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். தினமும் உணவு மூன்று வேளையும் வழங்கப்பட்டது. அந்த ஏழைகள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்பணி அந்தந்த பள்ளிகளில் உள்ள சத்துணவு ஊழியர்கள் தான் சுகாதார முறைகளை பின்பற்றி உணவு அளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தியமானது. மே மாதம் வரை யிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசும் மதிய உணவை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்க ளை அரசு உணவுப் பொருள்களாக தான் வழங்கி வருகிறது. பணமாக தரவில்லை, காரணம் உணவுப்பொருள்கள் முக்கியம். அங்கேயும் சுகாதார முறைகளைப் பின்பற்றி தரப்படுகிறது.   மரம் வளர மரத்தின் வேர்ப்பகுதியில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும். மாறாக மரத்தின் மேல் கிளை அல்லது இலைக்கு அல்ல. எனவே இதற்கு மாறாக சத்துணவுக்குரிய தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தி விடும் யோசனை நிச்சயம் உதவாது.அவரவர் குடும்பங்களில் அந்த பணம் அந்த குழந்தைக்கு என்று ஒதுக்கி செலவிட இயலாத சூழல் உள்ளது.அன்றாடம் ஏற்படும் குடும்ப செலவிற்கு அது செலவாகி விடும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சத்துணவு சமைக்க அரசு தற்போது வழங்க உத்தே சித்துள்ள இந்த உரிய உணவீட்டு செலவுத் தொகையை கொண்டு அந்த குடும்பத்தில் அந்த குழந்தைக்கு சத்துணவு, முட்டை ஆகியவை தினமும் வழங்க முடியாது. உத்தர வாதமும் இல்லை.

எனவே தமிழக முதல்வர் சத்துணவுக்குரிய  தொகையை பணமாக தராமல், அந்தந்த ஊரில் பள்ளிகள் மூலம் அந்த ஊரில் உள்ள படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சமைத்த சூடான சத்துணவு தினமும் வழங்கிட வேண்டும். அதை மூடப்பட்ட பாத்திரங்கள் மூலம் (டிபன் பாக்ஸ் )பெற்றுச் சென்று உணவருந்தவும் செய்யலாம். மேலும் அது சமயம் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை ,கிருமி நாசினி தெளிப்பு போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டே சத்துணவு வழங்கிட அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இதில் தமிழக முதல்வர்  தனிக் கவனம் செலுத்தவேண்டும்.

கட்டுரையாளர் : முன்னாள் மாநில பொதுச் செயலாளர் , 
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்.