திருச்சிராப்பள்ளி, பிப்.28- மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், குடியுரிமை சட்ட த்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் திருவெள்ளறை கிளை சார்பில் வியாழனன்று திருவெள்ளறை கடைவீதியில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் ஆனைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ், சுப்ரமணியன், ஒன்றிய செய லாளர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், செல்வ ராஜ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர் கட்சி நிதி ரூ.10 ஆயிரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜிடம் வழங்கினார். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் முருகேசன், நல்லையன், குமரே சன், சேகர், கருணாநிதி, பிச்சை, மனோ கரன், ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.