tamilnadu

img

முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருட்டு மோட்டார் மின் இணைப்பு துண்டிப்பு

தேனி, மார்ச் 9- முல்லைப்பெரியாற்றில்  குடிநீருக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பாசனத்திற்கு  மோட்டார் வைத்து திருடிய குழாய்  இணை ப்பை பொதுப்பணித்துறையினர் துண்டித்த னர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லா ததால், நீர்வரத்தின்றி அணையின் நீர்மட்டம் தற்போது 115.40 அடியாக  குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து தமிழகப்பகு திக்காக குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரை கம்பம் பள்ளத்தாக்கு பெரியாற்று படுகை யில் சிலர் மோட்டார் வைத்து திருடுவதால் வைகை அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட செல்லவில்லை. இதனால் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதையடுத்து தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தண்ணீர் திருடும் இணைப்புக் குழாய்களை துண்டித்தும், மோட்டார்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். ஞாயிறன்று  பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் கதிரேசன் தலைமையில், பொதுப்பணித் துறை, வருவாய்த்துறையினர் லேயர்கேம்ப் முதல் கூடலூர் காஞ்சிமரத்துறை, கரு நாக்கமுத்தன்பட்டி, உத்தமபாளையம் வரை உள்ள பெரியாற்று படுகை பகுதி களில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் முல்லைப்பெரியாற்றில் தண்ணீரை மோட்டார் வைத்து திருடிய 15 மின்மோட்டார்களின் இணைப்புகளை துண்டித்ததோடு இணைப்புக் குழாய்களை வெட்டி அழித்தனர்.