ஆண்டிபட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 11ம் வகுப்பு மாணவர் பாடங்கள் புரியவில்லை என்று தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.