tamilnadu

முல்லை பெரியாறு நீர் திறப்பு 125 ஆண்டுகள் நிறைவு.... விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்...

தேனி:
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு 125ஆண்டுகள் எட்டிய நிலையில் விவசாயிகள் பென்னிகுவிக் உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை ,சிவகங்கை,இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங் களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது.ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் இந்த அணையை கட்டி முடித்து,1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 125ஆண்டுகள் ஆன நிலையில் சனிக் கிழமை தேனி மாவட்ட விவசாயிகள் பென்னிகுவிக் நினைவாக பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டனர்.குருவனூத்து பாலத்தில் சிறப்புப் பூஜை செய்து ஆற்றில் மலர் தூவினர். பகவதியம்மன் கோவிலில் கிடா வெட்டி பழங்குடியின மக்களான முதுவான்கள் அணைக்காக உயிர்நீத்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.மதுரை விமானநிலையத்திற்கு பென்னிகுவிக் பெயர் வைக்க வேண்டும். பள்ளி பாடப்புத்தகங்களில் இவர் குறித்த விபரங்கள் இடம் பெற வேண்டும் என்று அவர் கள் வலியுறுத்தினர். உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளபென்னிகுவிக் சிலைக்கு 18-ஆம் கால்வாய்விவசாயிகள் சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.