போடி, மே 21- போடி அருகே வியாழக்கிழமை நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் 55 வயது நிறைவடைந்தவர்களுக்கும் பணி வழங்கக் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட 15 கிராமங்களில் வேலை உறுதி திட்டத்தில் நூறு நாள் வேலை வழங் கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளி களில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற் காலிகமாகமாக பணி வழங்க தடை விதிக் கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொற்று பர வும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறி 55 வய துக்கு மேற்பட்டோருக்கு பணி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போடி அருகே சிலமலை ஊராட்சியில் நூறு நாள் திட்டத்தின் கீழ் 55 வயது நிறைவடைந்தவர்களுக்கும் வழங்கக் கோரி பெண்கள் ஊராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டனர். 55 வயது நிறை வடைந்தவர்கள் வேலை இல்லாததால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தாகவும், முகக் கவசம் அணிந்து சமூக வில கலைக் கடைப்பிடித்து வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கூறி போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்த னர். போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சாந்தி, போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் 55 வயது நிறைவடைந்தவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், நிவாரண உதவிகள் கிடைக்க பரிந் துரை செய்வதாகவும் கூறி சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.