தேனி:
தேனி மாவட்ட சுமைப்பணி சங்கத்தலைவரும், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவருமான தோழர் ஏ. கருப்பசாமியின் படத்திறப்பு, குடும்ப நிதி வழங்கும் நிகழ்வுவெள்ளிக்கிழமை தேனியில் நடைபெற்றது.
சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். ஏ.கருப்பசாமியின் உருவப்படத்தை மாநிலத் தலைவர் எஸ். குணசேகரன் திறந்துவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் .எம்.ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் சி. முருகன் ஆகியோர் கருப்பசாமியின் பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பேசினர்.மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வெண்மணி, ஓய்வுபெற்ற ஆசிரியர் அரசு ஊழியர் சங்கத் தலைவர் பா.இராமமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி. கண்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி. முனீஸ்வரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி. ஜெயபாண்டி, ஏ.முருகவேல், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி .சண்முகம். சுமைப்பணி சங்க மாவட்டப் பொருளாளர் பி. ராஜேந்திரன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பி .பிச்சைமணி, கூட்டுறவு சங்க மாவட்டச் செயலாளர் எஸ். செந்தில் காமு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கருப்பசாமி குடும்ப நிதியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது.