தேனி,மே 19- துபாயில் உயிருக்குப் போராடும் போடி இளைஞரை மீட்க வேண்டும் என கோரி மனு அளிக்க வந்த பெற்றோரை மாவட்ட ஆட்சியர் சந்திக்காத நிலையில் கவலை யுடன் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துச் சென்றனர் . போடியைச் சேர்ந்த தையல் தொழி லாளி செல்வம் .இவரது மகன் கணேஷ் குமார் டிப்ளமோ படித்துவிட்டு, துபா யில் வேலை செய்துவருகிறார். அங்கு அவ ருக்கு மஞ்சள்காமலை ஏற்பட்டுள்ளது. தாம் உடல்நிலை மோசமடைந்து மருத்துவ உதவி கிடைக்காமல் தவிப்பதாக அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் பரவியது . மஞ்சள்காமாலையின் தாக்கம் குறை யாமல் இருப்பது மட்டுமல்லாமல் கேன்சர் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படு வதாகவும், உடனே இந்தியா புறப்பட்டுச் சென்றுவிடுங்கள் என துபாய் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகனை சொந்த ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கணேஷ்குமார் பெற்றோர் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்த னர். ஆனால், அவர்கள் ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நேர்முக உதவியாளரிடம் மனுஅளித்து விட்டுச் சென்றனர்.